உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

தாராபுரத்தில் இருந்து சென்னைக்கு அரசு பஸ் இயக்க பொதுமக்கள் கோரிக்கை

Published On 2021-12-02 09:09 GMT   |   Update On 2021-12-02 09:09 GMT
தனியார் பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். குறிப்பாக பண்டிகை காலங்களில் அதிக வசூல் செய்கின்றனர்.
தாராபுரம்:

தாராபுரத்தில் இருந்து சென்னைக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு தினசரி பஸ் சென்று கொண்டிருந்தது. தற்போது அந்த பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. தாராபுரத்தில் ரெயில் வசதி கிடையாது. தனியார் பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர்.

குறிப்பாக பண்டிகை காலங்களில் அதிக வசூல் செய்கின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். திருப்பூர், திண்டுக்கல் சென்று பஸ் ஏறி செல்லும் நிலை உள்ளதால் வீண் அலைச்சல் ஏற்படுகிறது. எனவே தாராபுரத்தில் இருந்து சென்னைக்கு அரசு பஸ் இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

Similar News