உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

திருப்பூரில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 2 பேர் கைது

Published On 2021-12-01 09:28 GMT   |   Update On 2021-12-01 09:28 GMT
சிறுமியின் பெற்றோர் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
திருப்பூர்:

திருப்பூர்-தாராபுரம் ரோடு பெரிச்சிபாளையம்பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது42). இவர் பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வீட்டருகே உள்ள பத்தாம் வகுப்பு படிக்கும் 16வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல்தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அந்தசிறுமி பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீசார் சிவக்குமாரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துசிறையில் அடைத்தனர்.

இதேபோல் திருப்பூர் பெருமாநல்லூர் ரோடு பாண்டியன் நகர் குமரன் தெருவைச் சேர்ந்தவர் நெசவு தொழிலாளியான நடராஜ்(80). இவர் வீட்டருகே இருக்கும் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் முதியவர் நடராஜனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News