செய்திகள்
மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதி விபத்து - வாலிபர் பலி
வீரபாண்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதி விபத்தில் சம்பவ இடத்திலேயே வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
உப்புக்கோட்டை:
வீரபாண்டி அருகே உள்ள போடேந்திரபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 25). நேற்று முன்தினம் இரவு இவர், தேனிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். உப்புக்கோட்டை விலக்கு அருகே வந்தபோது எதிரே வந்த ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அசோக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் அசோக்குமாரின் தாயார் ராஜேஸ்வரி புகார் செய்தார். அதன்பேரில் சடையால்பட்டி சாவடித்தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அஜித்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீரபாண்டி அருகே உள்ள போடேந்திரபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 25). நேற்று முன்தினம் இரவு இவர், தேனிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். உப்புக்கோட்டை விலக்கு அருகே வந்தபோது எதிரே வந்த ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அசோக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் அசோக்குமாரின் தாயார் ராஜேஸ்வரி புகார் செய்தார். அதன்பேரில் சடையால்பட்டி சாவடித்தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அஜித்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.