செய்திகள்
கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தற்கொலை
கிருஷ்ணகிரி அருகே கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியை அடுத்த ராமர்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. கூலித்தொழிலாளி. இவர் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் இவரது மனைவி பானுமதி (வயது 50)-க்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பானுமதி விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கணவர் இறந்த துக்கம் தாங்காமல் பானுமதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.