ஆன்மிகம்
ராமேசுவரம் கோவிலில் சொக்கப்பனை தீபம்

கார்த்திகையையொட்டி ராமேசுவரம் கோவிலில் சொக்கப்பனை தீபம்

Published On 2021-11-19 08:59 GMT   |   Update On 2021-11-19 08:59 GMT
கொரோனா கட்டுப்பாடு காரமணாக சாமி-அம்பாள் கோவிலின் 3-ம் பிரரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சொக்கப்பனை தீபத்தை கண்டுகளித்தனர்.
தமிழகம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் திருக்கார்த்திகையை யொட்டி நேற்று சொக்கப்பனை மகா தீபம் ஏற்றப்பட்டது. ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் நேற்று மாலை 6 மணி அளவில் கருவறையில் உள்ள சாமி-அம்பாளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்று சிறப்பு மகாதீப ஆராதனை பூஜைகள் நடை பெற்றன.

தொடர்ந்து கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற 3-ம் பிரகாரத்தின் தூண்களில் ஏராளமான தீப விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டன. பிரகாரத்தின் மைய மண்டபத்திலும் சிவலிங்க வடிவில் விளக்குகள் ஏற்றப்பட்டன. தீப விளக்கொளியில் பிரசித்தி பெற்ற 3-ம் பிரகாரம் பிரகாசமாக காட்சியளித்தது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு சாமி மற்றும் அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் கோவிலின் கிழக்குவசால் பகுதிக்கு எழுந்தருளினர்.

கொரோனா கட்டுப்பாடு காரமணாக சாமி-அம்பாள் கோவிலின் 3-ம் பிரரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சொக்கப்பனை தீபத்தை கண்டுகளித்தனர். இதேபோல் ராமநாதபுரத்தில் மீனாட்சி சொக்கநாதர் கோவிலிலும் சொக்கப்பனை தீபம் ஏற்பட்டது. முன்னதாக சாமிக்கும், முருக பெருமானுக்கும் சிறப்பு மகாதீப ஆராதனை பூஜைகளும் நடைபெற்றன.
Tags:    

Similar News