செய்திகள்
ஸ்டாலின்

‘சச்சின் கொரோனா தொற்றில் இருந்து விரைவில் நலம் பெற வேண்டும்’ - ஸ்டாலின் டுவிட்டரில் பதிவு

Published On 2021-04-02 23:57 GMT   |   Update On 2021-04-02 23:57 GMT
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் கொரோனா தொற்றில் இருந்து விரைவில் நலம் பெற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் தெண்டுல்கர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

தலைசிறந்த கிரிக்கெட் வீரரான சச்சின் தெண்டுல்கர் கொரோனா தொற்றில் இருந்து விரைந்து நலம்பெற விழைகிறேன். தற்போது ஏற்பட்டுள்ள பெருந்தொற்று அலையினை விழிப்போடு எதிர்கொள்ளுமாறும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளுமாறும் நாட்டு மக்களை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News