ஆன்மிகம்
நாகராஜா கோவில்

தைத்திருவிழாவை முன்னிட்டு நாகராஜா கோவிலில் கால்கோள் விழா

Published On 2020-11-30 08:43 GMT   |   Update On 2020-11-30 08:43 GMT
நாகர்கோவில் உள்ள நாகராஜா கோவிலில் இந்த ஆண்டுக்கான தைத்திருவிழா கால்கோள் விழா இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலில் ஆண்டு தோறும் தைத்திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். 

அதே போல இந்த ஆண்டுக்கான தைத்திருவிழா கால்கோள் விழா இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News