செய்திகள்
திருவையாறு அருகே மணல் கடத்தல்- 2 பேர் கைது
திருவையாறு அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவையாறு:
திருவையாறு அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்த பொன்னாவரையை சேர்ந்த மதன்குமார் (வயது29), திருவையாறு ஸ்ரீராம்நகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (24) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். இதேபோல் கொள்ளிடம் ஆற்றிலிருந்து மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட மாட்டு வண்டியை மருவூர் போலீசார் பறிமுதல் செய்து, அதை ஓட்டி வந்த நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.