ஆன்மிகம்
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2021-01-02 04:21 GMT   |   Update On 2021-01-02 04:21 GMT
திருவொற்றியூர் தியாகராஜசுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு சாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
திருவொற்றியூர் தியாகராஜசுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு நேற்று அதிகாலை 4.30 மணியளவில் சாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 7.30 மணிவரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

சாமி மற்றும் அம்மன் சன்னதிகளுக்கு செல்ல தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு முகவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News