செய்திகள்
கடலூர் மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று
கடலூர் மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 25 ஆயிரத்து 95 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 24 ஆயிரத்து 721 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், 287 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் நேற்று வெளியான உமிழ்நீர் பரிசோதனை முடிவில் புதிதாக 7 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இவர்களில் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 2 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியானது.
நேற்று மட்டும் 8 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 399 பேருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது. இதுதவிர கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 53 பேர் கடலூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளிலும், 33 பேர் பிற மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.