உள்ளூர் செய்திகள்
குடியரசு தின விழாவில் தேசியக் கொடி ஏற்றிய விஜய் வசந்த் எம்.பி.
குடியரசு தின விழாவில், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் பல்வேறு இடங்களில் குடியரசு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். மேலும், தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து குடியரசு தின உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.