ஆன்மிகம்
மலையப்ப சாமி கஜவாகனத்தில் எழுந்தருளிய காட்சி.

திருமலையில் அனுமந்த வாகனத்தில் மலையப்ப சாமி வீதி உலா

Published On 2021-10-13 03:15 GMT   |   Update On 2021-10-13 03:15 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளில் கல்யாண உற்சவ மண்டபத்தில் வெங்கடத்திரி ராமர் அலங்காரத்தில் மலையப்ப சாமி தோன்றினார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று காலை 9 மணிக்கு கோவில் கல்யாண உற்சவ மண்டபத்தில் வெங்கடத்திரி ராமர் அலங்காரத்தில் மலையப்ப சாமி தோன்றினார்.

மாலை 4 மணிக்கு மேல் 5 மணி வரை, சர்வ பூபால வாகன சேவை நடைபெற்றது.

இரவு 7 மணிக்கு கஜ வாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளி தரிசனம் கொடுத்தார். சேவைகளில் பெரியஜியார் சுவாமி, சின்னஜியார் சுவாமி, அறங்காவல் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News