ஆன்மிகம்
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ருத்ர யாகம்
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஹோம மகோற்சவம் நடந்து வருகிறது. அதையொட்டி யாக சாலையில் ருத்ர ஜபம், ஹோமம், லகு பூர்ணாஹுதி, நிவேதினம், ஹாரதி ஆகியவை நடந்தது.
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஹோம மகோற்சவம் நடந்து வருகிறது. அதையொட்டி நேற்று ருத்ர யாகம் தொடங்கியது. அதையொட்டி நேற்று காலை யாக சாலையில் ருத்ர ஜபம், ஹோமம், லகு பூர்ணாஹுதி, நிவேதினம், ஹாரதி ஆகியவை நடந்தது. மாலை பூஜை, ஜபம், ஹோமம், ருத்ராத்ரிஷதி, வில்வார்ச்சனை, நிவேதினம், விசேஷ தீபாராதனை, ஆரத்தி நடந்தது.
நிகழ்ச்சியில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் போகலா அசோக்குமார், கோவில் துணை அதிகாரி சுப்பிரமணியம், கண்காணிப்பாளர் பூபதி மற்றும் அதிகாரிகள், அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் போகலா அசோக்குமார், கோவில் துணை அதிகாரி சுப்பிரமணியம், கண்காணிப்பாளர் பூபதி மற்றும் அதிகாரிகள், அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.