ஆட்டோமொபைல்
மாருதி சுசுகி கார்

மீண்டும் விலையை மாற்றும் மாருதி சுசுகி

Published On 2021-03-23 06:45 GMT   |   Update On 2021-03-23 06:45 GMT
மாருதி சுசுகி நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்தப்போவதாக அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் தனது கார் மாடல்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. விலை உயர்வு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வருகிறது. கடந்த ஆண்டுகளில் உற்பத்திக்கான செலவு அதிகரித்து இருப்பதே விலை உயர்வுக்கு காரணம் ஆகும். 

இந்த ஆண்டு துவங்கியது முதல் இரண்டாவது முறையாக மாருதி சுசுகி விலை உயர்வை அறிவித்து இருக்கிறது. விலை உயர்வு ஒவ்வொரு மாடல் மற்றும் அவற்றின் வேரியண்ட்களுக்கு ஏற்ப மாறுபடும். தற்போது மாருதி சுசுகி நிறுவனம் 14 கார்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. 



இவற்றின் விலை ஆல்டோ மாடலுக்கு ரூ. 2.99 லட்சம் என துவங்கி டாப் எண்ட் எக்ஸ்.எல். மாடல் விலை ரூ. 9.84 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

முந்தைய பண்டிகை கால மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனம் 1,64,469 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு பிப்ரவரியுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மட்டும் மாருதி சுசுகி நிறுவனம் 11.8 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 
Tags:    

Similar News