உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

மாணவர்களுக்கு கல்விக்கடன் விரைந்து வழங்க நடவடிக்கை- கலெக்டர் பேச்சு

Published On 2021-12-05 09:44 GMT   |   Update On 2021-12-05 09:44 GMT
கல்விக்கடன் மட்டுமின்றி திறன் மேம்பாடு மற்றும் வங்கி சார்ந்த பிற சேவைகள் தொடர் பான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் பயனடையும் வகையில் கல்லூரி படிப்புக்கான கல்விக்கடன் பெற மாவட்ட முன்னோடி வங்கிகள் சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது. 

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமில் கனரா வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, யூனியன் வங்கி உள்பட 21 வங்கிகள் பங்கேற்றன. 300 கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த முகாமில் பங்கேற்று கல்விக்கடன் பெற விண்ணப்பித்தனர். 

இதில் கல்விக்கடன் மட்டுமின்றி திறன் மேம்பாடு மற்றும் வங்கி சார்ந்த பிற சேவைகள் தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

இம்முகாமில் பங்கேற்று கலெக்டர் எஸ்.வினீத் பேசுகையில், விண்ணப்பங்கள் அனைத்தும் விரைந்து பரிசீலனை செய்து மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கப்படும் என்றார். 
Tags:    

Similar News