செய்திகள்
சுற்றுலா வேன் கவிழ்ந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

போச்சம்பள்ளி அருகே விபத்து- ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்த வேன் கவிழ்ந்தது

Published On 2021-10-18 07:27 GMT   |   Update On 2021-10-18 07:27 GMT
போச்சம்பள்ளி அருகே உள்ள மாவத்தூர் கூட்டுச் சாலையில் டிரைவரின் கட்டுபாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது.
மத்தூர்:

விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகா, கல்பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 17 பெண்கள் சுற்றுலாவாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று வேனில் வந்தனர். கல்பெருபாக்கம் பகுதி சேர்ந்த சுசிந்திரன் (வயது 27) என்பவர் வேனை ஓட்டினார்.

நேற்று மாலை ஒகேனக்கல்லில் குளித்து விட்டு புதுச்சேரி நோக்கி வேனில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது தருமபுரி ஊத்தங்கரை செல்லும் நெடுஞ்சாலையில் போச்சம்பள்ளி அருகே உள்ள மாவத்தூர் கூட்டுச் சாலை பகுதியில் வந்த போது சாலையின் குறுக்கே வாத்து கூட்டம் நடந்தது. இதனால் வேன் டிரைவர் பிரேக் போட்டார்.

இதில் டிரைவரின் கட்டுபாட்டை இழந்த வேன் சாலையில் எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் தமிழ் பாரதி (24), அமுதா (40), வினிதா (24), அமலா (35), ஐஸ்வர்யா (18), அலமேலு (32), செவ்வந்தி (23), சுஜாதா (34), டிரைவர் சுசேந்திரன் (27) ஆகிய 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

இவர்கள் அனைவரும் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து போச்சம்பள்ளி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News