வழிபாடு
வாணியம்பாடியில் 10 லட்சம் ரூபாய் நோட்டுகளால் ஐயப்ப சாமிக்கு அலங்காரம்

வாணியம்பாடியில் 10 லட்சம் ரூபாய் நோட்டுகளால் ஐயப்ப சாமிக்கு அலங்காரம்

Published On 2021-12-14 06:01 GMT   |   Update On 2021-12-14 06:01 GMT
கார்த்திகை மாதம் சிறப்பு பூஜைகள் நடந்து வரும் நிலையில் நேற்று ஐயப்ப சாமிக்கு சுமார் 10 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளில் சொர்ண அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடத்தினர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, கச்சேரி சாலையில் உள்ள அயப்பன் கோவிலில் வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்வது வழக்கம்.

இந்தநிலையில் கார்த்திகை மாதம் சிறப்பு பூஜைகள் நடந்து வரும் நிலையில் நேற்று ஐயப்ப சாமிக்கு சுமார் 10 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளில் சொர்ண அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடத்தினர்.

இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News