உள்ளூர் செய்திகள்
விபத்து

உளுந்தூர்பேட்டை அருகே விபத்து: அண்ணன்-தங்கை பலி

Published On 2022-01-15 04:51 GMT   |   Update On 2022-01-15 04:51 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அண்ணன், தங்கை இருவரும் உயிரிழந்தனர்.
உளுந்தூர்பேட்டை:

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூபேட்டை அருகே செங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. அவரது மகன் மணிகண்டன். (வயது 24). கட்டிட தொழிலாளி. இவரது சித்தி மகள் உதயலட்சுமி. (19).

நேற்று இரவு மணிக்கண்டன் மோட்டார் சைக்கிளில் உதயலட்சுமியை அழைத்து கொண்டு செங்குறிச்சியில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி சென்றார்.

டோல்கேட் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில், சம்பவ இடத்திலேயே உதயலட்சுமி இறந்தார். படுகாயமடைந்த மணிகண்டன் உளுந்தூர் பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News