செய்திகள்
விஷம்

சுரண்டை அருகே பால் வியாபாரி வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2019-12-09 10:48 GMT   |   Update On 2019-12-09 10:48 GMT
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே தீராத வயிற்று வலி காரணமாக பால் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
தென்காசி:

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பரங்குன்றாபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் மாரிசாமி(வயது 50). இவர் அப்பகுதியில் பால் வியாபாரம் செய்து வந்தார். கடந்த சில மாதங்களாக மாரிசாமிக்கு கை, கால்களில் புண் ஏற்பட்டுள்ளது. மேலும் வயிறு வலியும் அதிகமாக இருந்துள்ளது. இதற்காக அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைகள் மேற்கொண்டார். ஆனால் குணமாகவில்லை.

இந்நிலையில் வயிறு வலி அதிகமானதால் வாழ்வில் விரக்தியடைந்த அவர் நேற்று முன்தினம் விவசாயத்திற்காக வைத்திருந்த களைக்கொள்ளி மருந்தை குடித்தார். உடனே அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனளிக்காமல் மாரிசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News