உள்ளூர் செய்திகள்
ரெயில்

யானை மீது மோதாமல் இருக்க ரெயிலை நிறுத்திய என்ஜின் டிரைவர்

Published On 2022-04-15 02:48 GMT   |   Update On 2022-04-15 02:48 GMT
செங்கோட்டை-கொல்லம் பாதையில் யானை மீது மோதாமல் இருக்க ரெயிலை நிறுத்திய ஓட்டுனரின் சாமர்த்தியத்தை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
நெல்லை:

பாலக்காடு -நெல்லை விரைவு ரெயில் புனலூர், செங்கோட்டை வழியாக மலை சார்ந்த வனப்பகுதிக்குள் இயக்கப்படுகிறது.

இந்த ரெயில் இன்று அதிகாலை 1.10 மணிக்கு தென்மலை - எடமண் ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது ரெயிலுக்கு முன்பு ரெயில் பாதையில் ஒரு யானை சென்று கொண்டிருந்தது.

உடனடியாக இதை கவனித்த ரெயில் என்ஜின் டிரைவர் அவசர பிரேக்கை பிடித்து ரெயிலை நிறுத்தினார். பின்பு அந்த யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விட்டது.

மேலும் இரவு நேரத்தில் அந்தப் பகுதியில் நெல்லை- பாலக்காடு எக்ஸ்பிரஸ் (16791) மற்றும் சென்னை கொல்லம் எக்ஸ்பிரஸ் (16101) ஆகியவை எதிர்திசையில் இருந்து இயக்கப்பட இருந்தது.

எனவே இந்த ரெயில்களின் என்ஜின் டிரைவர்களுக்கு அந்தப் பகுதியில் மெதுவாக கவனித்து செல்லும்படி ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.

இந்த ரெயில் வழிதடத்தில் ரெயிலின் நிரந்தர வேக கட்டுப்பாடு மணிக்கு 30 கி.மீ ஆகும்.

ரெயில் ஓட்டுனரின் சாமர்த்தியத்தை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

Tags:    

Similar News