செய்திகள்
கொளஞ்சியப்பர் கோவிலில் உண்டியல் திறப்பு: ரூ.84 ஆயிரம் காணிக்கை வசூலானது
விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் பிரசித்திப்பெற்ற கொளஞ்சியப்பர் கோவிலில் உண்டியல் காணிக்கை பணம் எண்ணும் பணி நடைபெற்றது.
விருத்தாசலம் :
விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் பிரசித்திப்பெற்ற கொளஞ்சியப்பர் கோவில் உள்ளது. இந்த கோவில் உண்டியல்கள் நேற்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன், கோவில் செயல் அலுவலர் மாலா ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது.
தொடர்ந்து காணிக்கை பணம் எண்ணும் பணி நடைபெற்றது. இதில், 84 ஆயிரத்து 376 ரூபாய் காணிக்கையாக வசூலாகி இருந்தது. காணிக்கை பணம் எண்ணும் பணியில் வங்கி பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்கள் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் பிரசித்திப்பெற்ற கொளஞ்சியப்பர் கோவில் உள்ளது. இந்த கோவில் உண்டியல்கள் நேற்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன், கோவில் செயல் அலுவலர் மாலா ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது.
தொடர்ந்து காணிக்கை பணம் எண்ணும் பணி நடைபெற்றது. இதில், 84 ஆயிரத்து 376 ரூபாய் காணிக்கையாக வசூலாகி இருந்தது. காணிக்கை பணம் எண்ணும் பணியில் வங்கி பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்கள் ஈடுபட்டனர்.