ஆன்மிகம்
காஞ்சாம்புறம் புனித குழந்தை தெரசா ஆலய தேர் பவனி இன்று நடக்கிறது
காஞ்சாம்புறம் புனித குழந்தை தெரசா ஆலய திருவிழாவின் இறுதி நாளான இன்று (வியாழக்கிழமை) திருவிருந்து பங்கு தந்தை பெஞ்சமின் தலைமையில் நடக்கிறது.
காஞ்சாம்புறம் புனித குழந்தை தெரசா ஆலய ஆண்டு திருவிழா கடந்த 27-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் ஆலய பங்கு தந்தை பெஞ்சமின், புதுக்கடை ஆலய பங்குதந்தை ஜீஸ் ரைமண்ட், வெள்ளையம்பலம் பங்கு தந்தை எட்வின் ஆகியோர் தலைமையில் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து புதுக்கடை பங்கு தந்தை ஜீஸ் ரைமண்ட் தலைமையில் முதல் நாள் திருப்பலி நடந்தது.
பின்னர் விழா நாட்களில் தினமும் மாலையில் மட்டும் திருப்பலி நடத்தப்பட்டு வந்த நிலையில் விழாவின் இறுதி நாளான இன்று (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு முதல் திருவிருந்து பங்கு தந்தை பெஞ்சமின் தலைமையில் நடக்கிறது. மாலை 5 மணிக்கு ஜெபமாலை, 5.30 மணிக்கு திருப்பலி, 6 மணிக்கு ஆலய வளாகத்தை சுற்றி தேர்பவனி நடக்கிறது. பிறகு திருக்கொடி இறக்கப்பட்டு திருவிழா முடிவடைகிறது.
பின்னர் விழா நாட்களில் தினமும் மாலையில் மட்டும் திருப்பலி நடத்தப்பட்டு வந்த நிலையில் விழாவின் இறுதி நாளான இன்று (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு முதல் திருவிருந்து பங்கு தந்தை பெஞ்சமின் தலைமையில் நடக்கிறது. மாலை 5 மணிக்கு ஜெபமாலை, 5.30 மணிக்கு திருப்பலி, 6 மணிக்கு ஆலய வளாகத்தை சுற்றி தேர்பவனி நடக்கிறது. பிறகு திருக்கொடி இறக்கப்பட்டு திருவிழா முடிவடைகிறது.