செய்திகள்
கோப்புப்படம்

காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர் பலி

Published On 2020-11-19 02:33 GMT   |   Update On 2020-11-19 02:33 GMT
காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர் நிகில் சர்மா பலியானார். மற்ற 2 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஸ்ரீநகர்:

காஷ்மீரில் குப்வாரா எல்லைப்புற மாகாணம் தங்தார் செக்டாரில் பனிப்பறைகள் சரிந்து விழுந்தன. இதில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் உள்ள இந்திய ராணுவ நிலை மீது பனிப்பாறைகள் உருண்டு வந்து அமுக்கின.

அப்போது பணியில் இருந்த 3 ராணுவ வீரர்கள், பனிப்பாறைகளின் அடியில் சிக்கினர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில், நிகில் சர்மா என்ற வீரர் பலியானார். மற்ற 2 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Tags:    

Similar News