செய்திகள்
பல்லடம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை
கருப்பசாமியும் அவரது மகன் கவுரிசங்கர் இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். வேலை முடிந்து இரவு வீடு திரும்பினர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள வெங்கிட்டாபுரம் காலனி பகுதியை சேர்ந்த கருப்புசாமி மனைவி லதா( வயது 40). நேற்று முன்தினம், கருப்பசாமியும் அவரது மகன் கவுரிசங்கர் இருவரும் வேலைக்கு சென்று விட்டனர்.
வேலை முடிந்து இரவு வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் வீட்டின் மீது ஏறி, ஓட்டை பிரித்து பார்த்த பொழுது வீட்டின் கூரை கம்பத்தில் சுடிதார் துப்பட்டாவால் தூக்குப்போட்டு லதா தொங்கிக் கொண்டிருந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், கதவை உடைத்து உள்ளே சென்று அவரை மீட்டு, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக, தெரிவித்தார். இதுகுறித்து மகன் கவுரிசங்கர் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.