செய்திகள்
கொள்ளை

உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் ரூ.76 ஆயிரம் பணம் கொள்ளை

Published On 2021-10-21 11:30 GMT   |   Update On 2021-10-21 11:30 GMT
கோவை பீளமேடு அருகே உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் ரூ.76 ஆயிரம் பணம் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை பீளமேடு அருகே உள்ள பி.ஆர்.எஸ். கார்டனை சேர்ந்தவர் சபீர் மதராஸ்வாலா (வயது 41). இவர் பட்டேல் ரோட்டில் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் வழக்கம் போல கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதில் அதிர்ச்சியடைந்த சபீர் மதராஸ் வாலா கடையின் உள்ளே சென்று பார்த்தார். கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் கல்லாவில் இருந்த ரூ.76,500 பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றது தெரிய வந்தது.

இது குறித்து சபீர் மதராஸ் வாலா காட்டூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News