ஆன்மிகம்
பூண்டி மாதா பேராலயத்தில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை
பூண்டி மாதா பேராலயத்தில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள பூண்டி மாதா பேராலயம் பிரசித்திப்பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றாகும். இங்கு ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடந்தது. இரவு 11.30 மணி அளவில் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி தொடங்கியது.
நிகழ்ச்சியில் பேராலய துணை அதிபர் அல்போன்ஸ் 2019-ம் ஆண்டுக்கு நன்றி தெரிவித்து வழிபாடு நடத்தினார். நள்ளிரவு 11.55 மணி அளவில் பேராலய அதிபர் பாக்கியசாமி மற்றும் அருட் தந்தையர்கள் பேராலயத்துக்குள் வந்தனர். இதையடுத்து திருப்பலி நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததை பேராலய அதிபர் அறிவித்து, வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்கு தந்தையர்கள் ஆரோக்கியராஜேஷ், விக்டர்லாரன்ஸ், ஆன்மிக தந்தை அருளானந்தம் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியில் கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். இதேபோல் நேற்று காலை தொடங்கி மாலை வரை சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. பூதலூர், கோட்டரப்பட்டி, முத்தாண்டிப்பட்டி, மணத்திடல், மேகளத்தூர் மற்றும் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களிலும் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் பேராலய துணை அதிபர் அல்போன்ஸ் 2019-ம் ஆண்டுக்கு நன்றி தெரிவித்து வழிபாடு நடத்தினார். நள்ளிரவு 11.55 மணி அளவில் பேராலய அதிபர் பாக்கியசாமி மற்றும் அருட் தந்தையர்கள் பேராலயத்துக்குள் வந்தனர். இதையடுத்து திருப்பலி நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததை பேராலய அதிபர் அறிவித்து, வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்கு தந்தையர்கள் ஆரோக்கியராஜேஷ், விக்டர்லாரன்ஸ், ஆன்மிக தந்தை அருளானந்தம் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியில் கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். இதேபோல் நேற்று காலை தொடங்கி மாலை வரை சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. பூதலூர், கோட்டரப்பட்டி, முத்தாண்டிப்பட்டி, மணத்திடல், மேகளத்தூர் மற்றும் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களிலும் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.