செய்திகள்
கோப்புப்படம்

ரெயில் முன் பாய்ந்து 5 மகள்களுடன் பெண் தற்கொலை

Published On 2021-06-11 00:36 GMT   |   Update On 2021-06-11 00:36 GMT
ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் குடும்பத்தகராறில் தற்கொலை செய்து கொண்டது சத்தீஷ்காரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராய்ப்பூர்:

சத்தீஷ்காரின் மகாசமந்த் மாவட்டம் பெம்சா கிராமத்தைச் சேர்ந்தவர் உமாசாகு (வயது 45). இவருக்கு அன்னபூர்ணா (18), யசோதா (16), பூமிகா (14), கும்கும் (12) மற்றும் துளசி (10) என 5 மகள்கள் இருந்தனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு உமாசாகுவுக்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் விரக்தி அடைந்த உமாசாகு வாழ்வதை விட சாவதே மேல் என நினைத்தார்.

தான் இறந்தால் மகள்கள் அனாதையாகி விடுவார்களே என்று நினைத்த உமாசாகு, 5 மகள்களையும் அழைத்துக்கொண்டு அருகில் உள்ள மகாசமந்த் - பெல்சோன்டா இடையேவுள்ள ரெயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில்முன் பாய்ந்து 5 மகள்களுடன் உமாசாகு தற்கொலை செய்து கொண்டார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் குடும்பத்தகராறில் தற்கொலை செய்து கொண்டது சத்தீஷ்காரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News