செய்திகள்
கோப்புபடம்

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டால் சிறப்பு பரிசு - வட்டாட்சியர் அறிவிப்பு

Published On 2021-09-11 11:54 GMT   |   Update On 2021-09-11 11:54 GMT
கோரோனோ தடுப்பூசி முகாமில் தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என்று வட்டாட்சியர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

கந்தர்வகோட்டை:

கந்தர்வகோட்டை தாலுகாவில் உள்ள அனைத்து துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் நடைபெறும் கோரோனோ தடுப்பூசி முகாமில் தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என்று வட்டாட்சியர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 36 ஊராட்சி மன்றங்களில் நாளை 12-9-21 அன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை அனைத்து கிராமங்களில் உள்ள துணை சுகாதார நிலையம் அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அங்கன் வாடி மையங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.இந்த முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அனைவரும் தவறாது கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தடுப்பூசி போட்டுக் கொள்ள வருபவர்கள் ஏதேனும் ஒரு அடையாள அட்டை கொண்டு வர வேண்டும். மேலும், தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளும் அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News