செய்திகள்

12-ம் வகுப்பு தேர்வில் மகன் தோல்வி - சோகத்தில் தாய் விஷம் குடித்து தற்கொலை

Published On 2019-05-14 10:50 GMT   |   Update On 2019-05-14 11:18 GMT
காஷ்மீர் மாநிலத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் மகன் தோல்வியடைந்த வேதனையில் ஒரு பெண் விஷம் குடித்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சம்பா மாவட்டத்துக்குட்பட்ட டாலூர் கிராமத்தை சேர்ந்தவர் நீலம் தேவி. பன்னிரெண்டாம் வகுப்பில் படித்துவந்த இவரது மகன் ஆண்டிறுதி தேர்வில் தோல்வியடைந்ததால் நீலம் தேவி மிகுந்த வேதனையடைந்தார்.

இந்நிலையில், வீட்டில் நேற்று மயங்கிய நிலையில் கிடந்த நீலம் தேவியை அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு உறவினர்கள் தூக்கிச் சென்றனர். ஆனால், அவர் குடித்திருந்த விஷத்தின் வீரியத்தால் வரும் வழியிலேயே நீலம் தேவியின் உயிர் பிரிந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் டாலூர் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News