செய்திகள்
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 41 பேர் பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 41 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 42 ஆயிரத்து 650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 41 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 42 ஆயிரத்து 650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 41 ஆயிரத்து 584 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 387 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 679 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் ஒருவர் இறந்துள்ளார்.