செய்திகள்
மழை

கனமழை: காஞ்சிபுரம், வேலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- சென்னை பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

Published On 2019-11-28 01:49 GMT   |   Update On 2019-11-28 01:49 GMT
கனமழை காரணமாக காஞ்சிபுரம், வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் மழையால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை :

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை  மீண்டும் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய துவங்கியுள்ளது. டிசம்பர் -1 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், கனமழை காரணமாக காஞ்சிபுரம், வேலூர் மாவட்டத்தில் உள்ள  பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். விடிய விடிய மழை பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

கனமழை காரணமாக சென்னை பல்கலை.கீழ் செயல்படும் கல்லூரிகளின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் மழையால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று துணைவேந்தர் துரைசாமி கூறியுள்ளார்.

வேலூர், காஞ்சிபுரத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் சென்னை பல்கலை. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News