ஆன்மிகம்
பழனி முருகன் கோவிலில் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சின்னக்குமாரர்
பழனி முருகன் கோவிலில் முருகப்பெருமானுக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஐப்பசி மாத கார்த்திகை உற்சவத்தையொட்டி, பழனி முருகன் கோவிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் விஸ்வரூப தரிசனம் நடந்தது. இதைத்தொடர்ந்து நடந்த விளாபூஜையில் சந்நியாசி அலங்காரத்திலும், சிறுகாலசந்தி பூஜையில் வேடர் அலங்காரத்திலும், காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரத்திலும், உச்சிகால பூஜையில் வைதீகர் அலங்காரத்திலும் முருகபெருமான் அருள்பாலித்தார்.
அதன்பிறகு மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் முருகப்பெருமானுக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கார்த்திகை உற்சவத்தையொட்டி நேற்று கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகமாக இருந்தது. இதனால் கிரிவல வீதி, சன்னதி வீதி, பாதவிநாயகர் கோவில், மின் இழுவை ரெயில்நிலையம், படிப்பாதை, ரோப்கார் நிலையம் ஆகிய இடங்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
மாலை 6 மணிக்கு மேல் மலைக்கோவிலின் வெளிப்பிரகாரத்திலுள்ள திருக்கல்யாண மண்டபத்தில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் 6.40 மணிக்கு தங்கமயில் வாகன புறப்பாடு நடந்தது. இதில் சின்னக்குமாரர் உட்பிரகாரத்திலும், 7 மணிக்கு மேல் தங்கரதத்திலும் எழுந்தருளினார். அப்போது சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதையடுத்து தங்கரத புறப்பாடு நடந்தது.
அதன்பிறகு மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் முருகப்பெருமானுக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கார்த்திகை உற்சவத்தையொட்டி நேற்று கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகமாக இருந்தது. இதனால் கிரிவல வீதி, சன்னதி வீதி, பாதவிநாயகர் கோவில், மின் இழுவை ரெயில்நிலையம், படிப்பாதை, ரோப்கார் நிலையம் ஆகிய இடங்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
மாலை 6 மணிக்கு மேல் மலைக்கோவிலின் வெளிப்பிரகாரத்திலுள்ள திருக்கல்யாண மண்டபத்தில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் 6.40 மணிக்கு தங்கமயில் வாகன புறப்பாடு நடந்தது. இதில் சின்னக்குமாரர் உட்பிரகாரத்திலும், 7 மணிக்கு மேல் தங்கரதத்திலும் எழுந்தருளினார். அப்போது சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதையடுத்து தங்கரத புறப்பாடு நடந்தது.