செய்திகள்
வைகோ

தென்காசி மாவட்டத்தில் ம.தி.மு.க. நிர்வாகிகள் நீக்கம் - வைகோ அறிவிப்பு

Published On 2021-10-25 08:03 GMT   |   Update On 2021-10-25 08:03 GMT
தென்காசி மாவட்டத்தில் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்ட மதிமுக நிர்வாகிகளை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைப்பதாக வைகோ அறிவித்தார்.

சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தென்காசி மாவட்டம், மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தைச் சேர்ந்த, ஒன்றியக் கழகப் பொறுப்பாளர் சிங்கப் புலி சசிக்குமார், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் பொன்.ராஜ், தெற்குப்பனவடலி கிளைக்கழக உறுப்பினர் மு.காளிமுத்து ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News