செய்திகள்
வைகோ

வைகோ நிகழ்ச்சியில் பட்டாசு வெடிக்க கூடாது- தலைமை கழகம் அறிவிப்பு

Published On 2019-08-16 05:06 GMT   |   Update On 2019-08-16 05:06 GMT
வைகோ கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிக்கக்கூடாது என்று ம.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

ம.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் கட்சி தொண்டர்கள் ஆர்வ மிகுதியால் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்து இடையூறும், தீ விபத்து ஏற்படும் அபாயமும், சுற்றுச்சூழல் மாசுபடுவதும் நிகழ்கின்றது. எனவே பட்டாசு வெடிப்பதை கட்சி தோழர்கள் கண்டிப்பாக கைவிட வேண்டும். இதனை மீறி செயல்படுவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News