செய்திகள்
நகை பறிப்பு

திருப்பரங்குன்றம் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு

Published On 2021-02-20 12:54 GMT   |   Update On 2021-02-20 12:54 GMT
திருப்பரங்குன்றம் அருகே பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம்:

திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகர் சுந்தர்நகரில் வசித்து வருபவர் மல்லிகா (வயது 60). இவர் நேற்று மதியம் 1 மணி அளவில் அதே பகுதியில் உள்ள வெற்றி விநாயகர் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 ஆசாமிகள் மல்லிகாவின் கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுதொடர்பாக திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News