செய்திகள்
தற்கொலை

சாமல்பட்டி அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை

Published On 2021-11-24 17:35 GMT   |   Update On 2021-11-24 17:35 GMT
சாமல்பட்டி அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்தங்கரை:

சாமல்பட்டி அருகே உள்ள குனிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சின்னண்ணன் (வயது 75). தொழிலாளி இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சின்னண்ணன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சாமல்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News