செய்திகள்
கொள்ளை

அம்மன் கோவிலில் உண்டியல் பணம், நகைகள் கொள்ளை

Published On 2021-09-18 12:21 GMT   |   Update On 2021-09-18 12:21 GMT
அம்மன் கோவிலில் உண்டியல் பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:

பாகலூர் அருகே சப்பலம்மா கோவில் உள்ளது. மர்ம நபர்கள் கோவில் கதவை உடைத்து உள்ளே புகுந்து உண்டியலை உடைத்து பணம் மற்றும் நகையை திருடிச் சென்றுள்ளனர். இந்த தகவல் அறிந்த கோவில் பூசாரி ராஜாப்பா அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி பாகலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்திய போது, கோவில் உண்டியலில் இருந்து ரூ.30 ஆயிரம், 4 கிராம் தங்க நகை ஆகியவை கொள்ளை போனது தெரிய வந்தது. இதுகுறித்து பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Tags:    

Similar News