செய்திகள்
பாகலூர் அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகலூர் அருகே குட்லபள்ளி கிராமத்தை சேர்ந்த நாகராஜ் மகன் சாகர் (வயது 21). பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த உறவுக்கார பெண்ணை காதலித்து வந்தார். இவரது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதில் மனம் உடைந்த சாகர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.