செய்திகள்
தற்கொலை

கிளாம்பாக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-10-17 00:43 GMT   |   Update On 2020-10-17 00:43 GMT
கிளாம்பாக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள கிளாம்பாக்கம் செல்லியம்மன் நகர், காந்தி தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 43). வெல்டிங் வேலை செய்து வந்தார். நேற்றுமுன்தினம் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த பாலமுருகன் வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பாலமுருகன் தனது வீட்டில் உள்ள படுக்கையறையில் உள் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டார். நீண்ட நேரமாக கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த உறவினர் பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பாலமுருகன் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் பாலமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News