ஆன்மிகம்
திருப்பதி

திருப்பதியில் நாளை முதல் மீண்டும் சுப்ரபாத சேவை தொடக்கம்

Published On 2020-01-14 05:50 GMT   |   Update On 2020-01-14 05:50 GMT
நாளை 15-ந்தேதி (தை 1-ந்தேதி) முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மீண்டும் சுப்ரபாத சேவை தொடங்க உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் அதிகாலை 3 மணிக்கு சுப்ரபாதம் பாடி துயில் எழுப்பி அதன்பின் நித்திய கைங்கரியங்களான தோமாலை, அர்ச்சனா உள்ளிட்ட சேவைகளை தேவஸ்தானம் நடத்தி வருகிறது.

மார்கழி மாதத்தில் மட்டும் சுப்ரபாதத்துக்கு பதிலாக ஆண்டாள் எழுதிப் பாடிய திருப்பாவை பாசுரங்கள் பாடப்பட்டு ஏழுமலையானை துயில் எழுப்புவது வழக்கம்.

அதன்படி கடந்த டிசம்பர் 17-ந்தேதி (மார்கழி 1-ந் தேதி) முதல் திருமலையில் சுப்ரபாத சேவை நிறுத்தப்பட்டு திருப்பாவை பாசுரங்கள் பாடப்பட்டு வருகின்றன.

இன்று போகி பண்டிகையுடன் மார்கழி மாதம் நிறைவு பெறுகிறது. நாளை 15-ந்தேதி (தை 1-ந்தேதி) முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மீண்டும் சுப்ரபாத சேவை தொடங்க உள்ளது.
Tags:    

Similar News