செய்திகள்
கோப்புப்படம்

சாலையில் தேங்கிய மழைநீரில் வலைவீசி மீன் பிடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள்

Published On 2020-11-18 08:56 GMT   |   Update On 2020-11-18 08:56 GMT
புதுவை காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு சாலையில் தேங்கிய மழைநீரில் வலைவீசி மீன் பிடிக்கும் போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டனர்.
புதுவை:

புதுவை காலாப்பட்டு சுனாமி குடியிருப்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளாக அங்கு உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறி பொதுமக்கள் செல்ல சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் எவ்வித பயனுமில்லை. இந்த நிலையில் தற்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக சேதமடைந்த சாலையில் மழைநீர் தேங்கி குளம்போல் மாறியுள்ளது

இதையடுத்து அப்பகுதியில் உள்ள மீனவர்கள் சாலையில் தேங்கிய மழைநீரில் வலைவீசி மீன் பிடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காலாப்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மீன்பிடி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சாலையை சீரமைக்க அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது.
Tags:    

Similar News