செய்திகள்
கோப்புபடம்

மதுக்கூரில் வங்கி ஊழியருக்கு கொரோனா

Published On 2021-08-04 15:08 GMT   |   Update On 2021-08-04 15:08 GMT
மதுக்கூரில் இந்தியன் வங்கி ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவருடன் பணிபுரிந்த மற்ற ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

மதுக்கூர்:

தஞ்சை மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த ஒருவர் மதுக்கூர் பேரூராட்சிக்குட்பட்ட இந்தியன் வங்கியில் உதவியாளராக வேலைபார்த்து வருகிறார்.

இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனோ பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து அவர் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால் இந்தியன் வங்கியில் அவருடன் பணிபுரிந்த மற்ற ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. கிருமி நாசினி மூலம் வங்கி சுத்தப்படுத்தப்பட்டது.

பரிசோதனை செய்தவர்களின் முடிவுகள் வரும் வரை தற்காலிகமாக வங்கி மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News