செய்திகள்
புதுவை முதலமைச்சர் நாராயணசாமி

பெரும்பான்மையை நிரூபிப்போம்- புதுச்சேரி முதலமைச்சர் திட்டவட்டம்

Published On 2021-02-16 08:59 GMT   |   Update On 2021-02-16 09:18 GMT
புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறது என்று முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி:

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் சிவக்கொழுந்தை பேரவையில் சந்தித்து ஜான்குமார் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து வருவது புதுவை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நான்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில் முதலமைச்சர் நாராயணசாமி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் நாராயணசாமி அவசர ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:

* புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறது.

* இந்திய அரசியல் சாசன சட்டப்படி புதுச்சேரி அரசு செயல்படும்.

* புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா செய்யப்படாது. பெரும்பான்மையை நிரூபிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News