செய்திகள்
தற்கொலை

கண்ணமங்கலம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

Published On 2021-10-08 09:16 GMT   |   Update On 2021-10-08 09:16 GMT
கண்ணமங்கலம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே உள்ள சந்தவாசல் புஷ்பகிரி கொல்லமேட்டை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 55), விவசாயி. அவரது மனைவி கஸ்தூரி (45). இவர்களுக்கு ராம்குமார் (18) என்ற மகனும், ரம்யா (16) என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று சீனிவாசன் பூச்சி மருந்து (விஷம்) குடித்துள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து சந்தவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News