செய்திகள்
விபத்து

பொன்னேரி அருகே செங்கல் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து 2 பேர் படுகாயம்

Published On 2019-11-13 08:31 GMT   |   Update On 2019-11-13 08:31 GMT
பொன்னேரி அருகே செங்கல் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொன்னேரி:

பொன்னேரியில் இருந்து சென்னைக்கு செங்கல் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. டிரைவர் மதன் லாரியை ஓட்டினார். மீஞ்சூர் அருகில் உள்ள 400 அடி சாலையில் சென்றபோது மாடு குறுக்கே வந்ததால் டிரைவர் பிரேக் போட்டார்.

அப்போது எதிர்பாராத விதமாக லாரி கவிழ்ந்தது. இதில் கூலி தொழிலாளர்கள் சண்முகம், முத்துகிருஷ்ணன் ஆகியோர் சிக்கி படுகாயம் அடைந்தனர். 2 பேரும் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

Tags:    

Similar News