செய்திகள்
கோப்புப்படம்

இந்தியாவில் கடந்த 538 நாட்களில் குறைவான தினசரி கொரோனா பாதிப்பு

Published On 2021-11-22 04:33 GMT   |   Update On 2021-11-22 04:33 GMT
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 8,488 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளார்.
இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தினந்தோறும் காலை 8 மணிக்கு, கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு குறித்த அறிக்கையை வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 8,488 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12,510 பேர் குணமடைந்துள்ள நிலையில் 249 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 5,080 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் தற்போது 1,18,443 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த 534 நாட்களில் இது மிகவும் குறைந்த எண்ணிக்கையாகும். மொத்த பாதிப்பில் இது 1 சதவீதத்திற்கும் குறைவாகும்.
Tags:    

Similar News