செய்திகள்
கொட்டாம்பட்டி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
கொட்டாம்பட்டி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொட்டாம்பட்டி:
கொட்டாம்பட்டி அருகே உள்ள வெள்ளினிப்பட்டியை சேர்ந்தவர் சேவுகப்பெருமாள்(வயது 64). விவசாயி. இவருக்கு வயிற்று வலி இருந்துள்ளது. அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 25-ந்தேதி தீராத வயிற்று வலி ஏற்பட்டதால் மனமுடைந்து பூச்சி மருந்தை குடித்துள்ளார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.