செய்திகள்
கொரோனா வைரஸ்

நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 64 பேருக்கு கொரோனா

Published On 2021-07-18 10:14 GMT   |   Update On 2021-07-18 10:14 GMT
நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் புதிதாக 64 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதால், இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 46,411 ஆக அதிகரித்து உள்ளது.
நாமக்கல்:

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 46 ஆயிரத்து 350 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 3 பேரின் பெயர் அந்தந்த மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 46,347 ஆக குறைந்தது.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,411 ஆக அதிகரித்து உள்ளது.

இதற்கிடையே நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 62 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 45 ஆயிரத்து 147 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள 828 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 435 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று நாமக்கல் தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 65 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார். எனவே மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 436 ஆகஅதிகரித்து உள்ளது.
Tags:    

Similar News