செய்திகள்
கோப்புபடம்

ஜீவன் ரக்ஷா விருது பெற விண்ணப்பிக்கலாம்

Published On 2021-07-21 10:19 GMT   |   Update On 2021-07-21 10:19 GMT
மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரைதுணிச்சலுடன் தைரியமாக போராடி மீட்பவர்களுக்கு ‘சர்வோத்தம் ஜீவன்ரக் ஷா’ பதக்கம் வழங்கப்படுகிறது.
திருப்பூர்:

ஜீவன் ரக்ஷா பதக்க விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நீரில் முழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்து, விபத்து, தீ விபத்து, நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கை ஆகியவற்றில் ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு ‘ஜீவன் ரக்ஷா பதக்க விருது’ வழங்கப்படுகிறது. மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரைதுணிச்சலுடன் தைரியமாக போராடி மீட்பவர்களுக்கு ‘சர்வோத்தம் ஜீவன்ரக் ஷா’ பதக்கம் வழங்கப்படுகிறது.துணிச்சலுடன் தாமதமின்றி உடனடியாக செயல்பட்டு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை போராடி மீட்பவர்களுக்கு ‘உத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம்‘ வழங்கப்படுகிறது.

இந்த விருது தகுதியுள்ளோருக்கான விண்ணப்பங்கள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்களை ஆகஸ்ட் 6-ந் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News