செய்திகள்
நளின்குமார் கட்டீல்

எடியூரப்பாவை மாற்றுவது குறித்து விவாதிக்கவில்லை: நளின்குமார் கட்டீல்

Published On 2021-01-18 02:02 GMT   |   Update On 2021-01-18 02:02 GMT
எங்கள் கட்சியில் எடியூரப்பாவை மாற்றுவது குறித்து விவாதிக்கவில்லை என்று மாநில பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் கூறியுள்ளார்.
பெங்களூரு :

மாநில பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மார்ச் மாதத்திற்கு பிறகு முதல்-மந்திரி பதவியில் இருந்து எடியூரப்பா நீக்கப்படுவார் என்று சித்தராமையா கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உள்ள சிலரே தனக்கு தகவல் தெரிவித்ததாக அவர் தெரிவித்துள்ளார். 

எங்கள் கட்சியில் எடியூரப்பாவை மாற்றுவது குறித்து விவாதிக்கவில்லை. சித்தராமையா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்தாரா?. மாட்டிறைச்சி சாப்பிடும் அவருக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. சித்தராமையாவை ராகுல் காந்தி தொலைவில் வைத்துள்ளார்.

இவ்வாறு நளின்குமார் கட்டீல் கூறினார்.
Tags:    

Similar News